கனடா டொரோண்டோ பகுதியில் தொடர் கொலைகாரன் மெக் ஆர்தர் (66) சினிமா பாணியில் தனது பூந்தொட்டிகளுக்குகள் பல பிணங்களை புதைத்து வைத்திருப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரைக் கைது செய்த நிலையில் இப்போது புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையிலிருந்து கனடா வந்து வாழ்ந்த கிருஷ்ணகுமார் கனக ரத்தினம் (37) என்பவரின் கொலையில் மெக் ஆர்தர் மீது சந்தேகம் இருப்பதாகக் டொரொண்டொ பொலிசார் கூருகின்றனர்.
கிருஷ்ணகுமார் கனக ரத்தினத்தின் மரணம் குறித்த தகவலை இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து விட்டதாக டொராண்டோ போலீஸ் பிரிவை சேர்ந்த அதிகாரி ஹேங்க் இட்ஸிங்கா தெரிவித்தார்.
கொலையுண்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினம் 2015 செப்டம்பர் 3லிருந்து டிசம்பர் 14ம் தேதிக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறும் போலீஸ் அவரின் குடியுரிமை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
கொலையாளிக்குத் தொடர்புடைய இடத்தில் இருந்த பூந்தொட்டிகளில் 7 பேருடைய சடலம் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த நிலையில் கிடைத்திருக்கிறது.
இந்த ஏழு பேருடன் 8வதாக கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தையும் மெக் ஆர்தர் கொன்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
http://www.viduppu.com/canada/03/176874?ref=ls_d_gossip
No comments:
Post a Comment