Friday, October 20, 2017

இறந்த மகளின் சடலத்தை தூக்கி சென்ற பெற்றோர் - ஏழையின் அவலம்!


இந்தியாவில், பீகார் மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சையின்றி இறந்த மகளின் உடலை தந்தை 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள ஜமூரி மாவட்டத்தை சேர்ந்த ராம் பாலக் என்ற நபர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத தனது 10 வயது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதுடன், சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் உடல்நிலை மோசமான ராம் பாலக்கின் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிகவும் ஏழ்மையில் வாடும் ராம் பாலக், ஆம்புலன்ஸ் வாகனம் கூட கிடைக்காத நிலையில் தனது மகளின் உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

http://www.canadamirror.com/india/04/146041

No comments:

Post a Comment