Saturday, June 24, 2017

திரு ஆறுமுகம் மனோகரன் (ஓய்வுபெற்ற லிகிதர்- ஓய்வூதிய கிளை, வவுனியா) மரண அறிவித்தல்!

பிறப்பு : 8 டிசெம்பர் 1944 — இறப்பு : 23 யூன் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளம் 3ம் ஒழுங்கையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் மனோகரன் அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், சிதம்பரப்பிள்ளை அமுதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரி, அருண்குமார்(ஐக்கிய அமெரிக்கா), திவாகரி(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(சிங்கர் சிறிலங்கா PLC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேந்திரம், சிவலிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சாளினி(ஐக்கிய அமெரிக்கா), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னலட்சுமி, செல்வமலர், கலாவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின், ஆத்விக், பவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரி்ன் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது நெளுக்குள இல்லத்தில் நடைபெற்று பின்னர்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94772428641
அருண்குமார் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+16082934286
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770814566
http://www.kallarai.com/ta/obituary-20170624215921.html

No comments:

Post a Comment