அதேபோன்று காலி, அக்குரஸ்ஸ, கனஹலாகம பிரதேசத்தில் தாய், ஒருவரும் மகள் ஒருவரும் வலுவான பிணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
தாய்க்கு 77 வயதாகும் வரை, தாய் குறித்து மகளும், மகள் குறித்து தாய்க்கும் இடையில் அளவற்ற அன்பு காணப்பட்டுள்ளது.
குறித்த மகள் திருமணம் முடிந்து 3 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தனது தாயாரின் திடீர் பிரிவு கடுமையாக மகளை பாதித்துள்ளது. அதனால் ஏற்பட்ட துயரத்தில் மூன்று பிள்ளைகளை தவிக்க விட்டு மகளும் உயிரிழந்துள்ளார்.
52 வயதுடைய இந்திரானி ராஜபக்ச என்ற மகளும் 77 வயதுடைய கருணாவத்தி வெதசிங்க என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment